
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச தயாராக இருக்கிறேன்
உக்ரேன் – ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது.
இந்நிலையில், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ”போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய ஜனாதிபதி புதினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன். உக்ரேன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷ்யா தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News

