
டச்சு தூதுவருக்கும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையில் சந்திப்பு
டச்சு தூதுவர் போனி ஹோர்பாக் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் உறவுகள் மற்றும் இலங்கையில் உள்ள வரலாற்று கலைப்பொருட்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்புவதில் ஒத்துழைப்பு, பண்டைய பனை ஓலை புத்தகங்களை மீட்டெடுப்பது உட்பட பல விடயங்கள் விவாதிக்கப்பட்டது.
போனி ஹோர்பாக் நாட்டிற்கு செய்த சேவைக்கு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார், மேலும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

