பொலிஸ் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது

பொலிஸ் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 1,455 பேர் கைது செய்யப்பட்டனர்,

சந்தேகநபர்களிடமிருந்து 374 கிராம் 336 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 218 கிராம் 281 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளின் போது குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்,

மேலும் பல்வேறு குற்றங்களுக்காக வாரண்ட் பெற்ற 408 பேர் இந்த சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

போலீசார் , போலீஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் 6,500க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது , 24,281 நபர்கள் , 10,175 வாகனங்கள் மற்றும் 7,240 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை , ஜூலை 18 முதல் ஜூலை 24 வரையிலான காலப்பகுதியில் , சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளின் போது, 02 கிலோகிராம் 100 கிராம் ஐஸ், சுமார் 01 கிலோகிராம் ஹெராயின், சுமார் 82 கிலோகிராமுக்கு மேல் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )