
யாழ். மண்டைதீவு மனித புதைகுழிக்கு நீதியான விசாரணையை கோரி வேலணை பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
யாழ். மண்டைதீவு மனித புதைகுழிக்கு நீதியான விசாரணையை கோரி வேலணை பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது சுயேட்சைக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பில் பிரேரணையை முன்வைத்திருந்தார்.
குறித்த பிரேரணை சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

