
கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (29) குறிப்பிட்ட அளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 197.10 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 20,997.36 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 7.4 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

