
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 543 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 28,879 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 384 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 42 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

