
நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மீதான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் சபாநாயகர் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

