
பெகோ சமன் மற்றும் தெம்பிலி லஹிருவை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக ‘பெகோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17) அனுமதி அளித்துள்ளது.
‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக ‘பெகோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் இன்று(17) ஆஜர்படுத்தப்பட்ட போதே வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் என கூறப்படும் “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோர் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

