
மஹகனதராவ குளத்திற்கு குறுக்கே அமைந்திருக்கும் பாதையின் இரு பகுதிகளிலும் குளக்கட்டு அமைக்கும் பணிகள் ஆரம்பம்
அனுராதபுரம்-திருகோணமலை வீதியில் உள்ள மஹகனதராவ குளத்திற்கு குறுக்கே அமைந்திருக்கும் பாதையின் இரு பகுதிகளிலும் உள்ள குளக்கட்டை புணரமைக்கும் அபிவிருத்திப் பணிகள் அண்மையில் (19) ஆரம்பிக்கப்பட்டன.
இதுவரை எந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், மஹகனதராவ குளத்திற்கு குறுக்கே செல்லும் வீதியின் இந்தப் பகுதியில் உள்ள குளக்கட்டுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, இது வீதியின் பாதுகாப்பிற்கும் அதனைப் பயன்படுத்தும் மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
அதன்படி, இங்கு அபிவிருத்திப் பணிகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும், மேலும் இந்த புதிய குளக்கட்டுகள் வீதியின் இருபுறமும் 5 மீட்டர் அகலத்தில் கட்டப்படும்.
முதல் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ. 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வீதியின் இருபுறமும் உள்ள குளக்கட்டுக்களின் அபிவிருத்தி பணிகளுக்காக ரூ. 2000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பண்டைய நகரமான மிஹிந்தலையை சுற்றுலா தலமாக மாற்றும் திட்டத்திற்கு இணையாக, மஹகனதராவ குளத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலா தலமாக மாற்றுவது மற்றொரு நோக்கமாகும் என்பதுடன், இது தொடர்பாக மிஹிந்தலை பிரதேச அபிவிருத்திக் குழுவும் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.
அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு

