வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

அதனடிப்படையில், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, வவுனியா, மாத்தளை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென தெரிவித்துள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை அமுலிலிருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )