ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சு நடத்த புதிய குழுவை நியமித்த ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சு நடத்த புதிய குழுவை நியமித்த ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஐக்கிய தேசிய கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, ஜனாதிபதி சட்டத்தரணி ரெனோல்ட் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பல கட்சி முறையிலான ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )