
வன்னிநாயக்க மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவில் ஆஜர்
நீதிமன்றில் முன்னிலையான பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று (16) காலை மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கடந்த வௌ்ளிக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலையான பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

