கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலி முகத்திடலில் மேற்கொண்ட மரம் நடும் திட்டம்

கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலி முகத்திடலில் மேற்கொண்ட மரம் நடும் திட்டம்

2025 டிசம்பர் 9 ஆம் திகதி அன்று கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிலையான சூழல் நட்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டத்தின் கீழ் மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டு, மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் 2025 அக்டோபர் 25 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள காலி முகத்திடல் கடற்கரையில் தேங்காய் மரக்கன்றுகள் நடப்பட்டன.

May be an image of one or more people, tree and text that says "SAILING AILINGSTRONG-75YEARSLONG STRONG -75 YEARS EARSLONG LONG"

இந்தத் தொடரின் மரம் நடும் திட்டங்களின் கீழ், கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கிய, தீவின் கடலோர, குளம் மற்றும் நிலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்ற தாவரங்களை நடும் நிகழ்வு கட்டளைத் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய, மேற்கு, தென்கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் தொடர்ச்சியான மர நடுகை திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதுடன், இதன் கீழ் தீவின் கடலோர, குளம் மற்றும் உள்நாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய ஏராளமான தேங்காய், கொய்யா, மா, குபுக், எலுமிச்சை மற்றும் கொஹொம்ப மரக்கன்றுகள் நடப்பட்டன.

May be an image of one or more people, grass, tree and text that says "SAILING STRONG -75 SALINGSTRONG-75YEARSLONG YEARS 5YEARSLONG LONG PUMIN"

மேலும், க்ளீன் ஶ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னணி பங்காளியாக, இலங்கை கடற்படையினர், இதுபோன்ற பல சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், மேலும், 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு மரம் நடும் திட்டத்தின் மூலம், எதிர்கால சந்ததியினருக்காக நாட்டின் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நிலைத்தன்மையை மேலும் பாதுகாக்க கடற்படை நம்புகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )