குளியாப்பிடிய தேசிய கல்வியற் கல்லூரி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டது

குளியாப்பிடிய தேசிய கல்வியற் கல்லூரி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டது

குளியாப்பிடிய தேசிய கல்வியற் கல்லூரி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (03) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், குளியாபிட்டிய தேசிய கல்வியற் கல்லூரி, இலங்கை அரசாங்கத்திற்கும், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (KOICA) இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் விளைவாக நிறுவப்பட்டதாகவும், க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைக் கற்கும் மாணவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்கத் தகுதியான தொழில்நுட்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பது இந்த நிறுவனத்தை நிறுவுவதன் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த மதிப்புமிக்க வளங்களைக் கொண்ட நிலம், புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க மேற்கொள்ளப்படவுள்ள தொழில் கல்விக்கும் தேவையான நன்மைகளைப் பெற முடியும் என்றார்.

அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் KOICA திட்டம் இணைந்து தயாரித்த இணைந்த செயல்திட்டத்தின் விளைவாக, கட்டுமானப் பணிகள் மற்றும் ஏனைய சேவைகளுக்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், மூன்று பாடப்பிரிவுகளின் கீழ் 210 மாணவர்கள் கல்வி கற்பதுடன், 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். திட்டமிடப்பட்டுள்ளது. இக்கல்வியற் கல்லூரியில் 9 உயிரியல் கட்டமைப்பு ஆய்வகங்கள், ஸ்மார்ட் ஆய்வகம், இ-நூலகம் மற்றும் பல்நோக்கு கட்டடம் போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 630 மாணவர்கள் தங்கியிருக்கக் கூடிய வகையில் விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், இலங்கையில் தொழில்நுட்பக் கல்வியை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய மைல்கல் எனக் கருதப்படுகிறது.

குளியாபிட்டிய நாரங்கல்லவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ அம்மையார், KOICA இலங்கையின் பணிப்பாளர் யூலி லீ (Yooli LEE), கல்வியற் கல்லூரி ஆணையாளர் பி.டி. இரோஷினி கே. பரணகம உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )