
அத்தனகலு ஓயாவில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு
அத்தனகலு ஓயாவில் ஆடைகளற்ற நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தனகல பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

