
மிரிஸ்ஸ கடற்கரையில் நீரில் மூழ்கி வைத்தியர் உயிரிழப்பு
மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடச் சென்ற 49 வயதுடைய வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட அவரை உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

