சகல பழுதடைந்த வரிசை வீடுகளும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

சகல பழுதடைந்த வரிசை வீடுகளும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

நாட்டில் மலையாக சமூகத்தின் பழுதடைந்த வரிசை வீடுகளை புதுப்பிப்பதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புவசதிகள் அமைச்சினால் எண்ணூற்று இருபத்தி ஐந்து இலட்சத்து அறுபத்து ஆரா.யிரத்து இருபது ரூபாய் பெறுமதியான (825, 66, 020.00 ) கூரைத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடு மலையக மக்களின் புதுப்பிக்கப்பட வேண்டிய சகல வீடுகளையும் புதுப்பிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி பெருந்தோட்ட அமைச்சினால் 825இலட்சம் ரூபாய் அளவிலான நிதி செலவிடப்பட்டு, சேதம், பழுதடைந்த வரிசை வீடுகளைப் புதுப்பிப்பதற்கு அவசியமான கூரைத் தகடுகளை சம்பந்தப்பட்ட தோட்டங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரிசை வீடுகளில் உள்ள தோட்டக கம்பனிகளின் ஊடாக அவசியமான ஏனைய உபகரணங்களையும் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பழுதடைந்த வரிசை வீடுகளை புதுப்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

காலி, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் பல வருடங்களாக புதுப்பிக்கப்படாத பழுதடைந்த வரிசை வீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மலையக மக்களைக் குடியமர்த்துவதற்காக 1880 ஆம் ஆண்டளவில் ஆரம்பத்தில் லயம் அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் குறைந்த வசதிகளுடன் அதிகமான மக்கள் இன்றும் அந்த லயம் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

2023 செப்டம்பர் 23ஆம் தேதி ஹட்டன் நகரில் தோட்டம் மக்கள் இந்த நாட்டிற்கு வருகை தந்து இருநூறு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெற்ற வரலாற்று மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க மேற்கொண்டு ஹட்டன் பிரகடனத்தில் “ தோட்ட மக்களின் உரிமை பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் “ என குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் மொத்த சனத் தொகையில் 4.1% இல் உள்ள மலையக மக்கள் அன்றும் இன்றும் நாட்டின்தேசிய பொருளாதாரத்திற்கு ஆட்சிய பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.. கடந்த 2025 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதினால் 1.5 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றதுடன் கடந்த ஒவ்வொரு வருடத்திலும் மலையக மக்கள் நாட்டிற்கு மில்லியன் கணக்கான தொடர்களை வழங்குவதற்கு அர்ப்பணித்துள்ளார்கள்.

இம்மக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிப்பதற்கான நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவினால் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 1,350/- ரூபாய்களாக காணப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1,750/- ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )