
பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்களின்றி மூடப்பட்டிருந்த மகப்பேற்று விடுத்திக்குரிய மருத்துவ உபகரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கும் மார்க்கண்டு நேசராசா என்பவர் வழங்கிய 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நேற்றைய தினம் வைத்தியசாலை நிருவாகத்தினரிடைம் வழங்கி வைக்கப்பட்டன.
பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அலைச்சாந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகப்பேற்று வைத்திய நிபுணர் கருணாகரன்,
மட்டக்களப்பு வட்ஸ் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை நிருவாகத்தினர், தாதியர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



