நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பெண்கள் அதிகாரம் பெற வேண்டும்

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பெண்கள் அதிகாரம் பெற வேண்டும்

உலகளாவிய போக்குகளை இனங்கண்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில், இந்த நாட்டில் பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

சர்வஜன அதிகாரத்தின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தைப் பெறுவதற்காக மட்டுமே பெண்களைப் பயன்படுத்தும் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர், “வரலாறு முழுவதும் நடந்தது என்னவென்றால்… பெண்கள் தொடர்பான அரசியல் எப்போதும் பெண்கள் பயன்படுத்தப்பட்ட அரசியலாகவே இருந்து வருகிறது.

அதனால்தான் பெண்கள் ஆக்கப்பூர்வமாக அதிகாரம் பெற வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.எல்லா நேரங்களிலும் தொழில்முனைவோரில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க உதவுங்கள். சர்வஜன அதிகாரம் அதை நோக்கிச் செயல்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )