
மித்தெனிய முக்கொலை – மேலும் ஒருவர் கைது
மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால், குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் வைத்து நேற்று (08) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குட்டிகல, பதலங்கல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகேவும் அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
அதன்படி, இந்தக் குற்றம் தொடர்பாக இதுவரை 11 சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸாரும், தங்காலை பிரிவு குற்ற விசாரணை பணியகமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.