பம்பலபிட்டியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

பம்பலபிட்டியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலில் இந்த நபர் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)