
2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது
அம்பாந்தோட்டை – சூரியவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹஜதுர பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் செவனகல பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 920 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka