
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூகி இயந்திர உதிரி பாகங்கள் கடையில் இருந்து ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான தகராறின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

