
பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல்
பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

