
பாப்பரசரின் இறுதி ஆராதனை – இலங்கை சார்பில் அமைச்சர் விஜித பங்கேற்பு
பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை நாளை (26) காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது.

