
புதிய விவசாய பணிப்பாளர் நாயகம் நியமனம்
விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியில் பணியாற்றும் இலங்கை விவசாய சேவையின் விசேட தர அலுவலர் டபிள்யூ. ஏ.ஆர்.ரி. விக்ரமாராச்சியை உடனடியாக அமுலாகும் வகையில் நியமனம் செய்வதற்காக விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
விவசாய பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றிய கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பி.எதிரிமான்ன 2025-05-18 திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

