
இஷாரா செவ்வந்தி இலங்கையில் தான் உள்ளார்
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை, இலங்கையில் தான் உள்ளார் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் குறிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் போது, கொலை தொடர்பான தகவல்கள் மற்ற சந்தேக நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

