
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும் சாணக்கியன் எம்.பிக்கும் இடையில் கலந்துரையாடல்
“அணையா விளக்கு” மக்கள் எழுச்சி போராட்டத்தின் இறுதி நாளான நேற்று (25) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் தமிழ் கட்சிகளை பிரதினுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள் சகிதம் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.


