
மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய சமுத்திர திருக்குளிர்த்தி
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி நேற்று (10) வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை (01 ) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவில் தொடர்ந்து பத்து நாட்கள் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து ,நேற்றைய தினம் (10) காலை விநாயகர் பானை எழுந்தருளல் இடம்பெற்றதை தொடர்ந்து , சில முத்துமாரி அம்பாள் கிராம ஊர்வலமாக சமுத்திர திருக்குளிர்த்திக்காக புறப்பட்டார்.
பின் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ , ஆனிப்பூரணையில் சித்தயோகத்துடன் கூடிய சுப முகிர்த்த வேளையில் சமுத்திர திருக்குளிர்த்தி சடங்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.


CATEGORIES Sri Lanka

