செம்மணியில் குழந்தைகளின் மனித எச்சங்களும் அடையாளம்

செம்மணியில் குழந்தைகளின் மனித எச்சங்களும் அடையாளம்

செம்மணி மனிதப்  புதைகுழி அகழ்வு  – கட்டம் 2, 17ஆவது நாள் அகழ்வு நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப்  புதைகுழி இடத்தில் நேற்று (23) மொத்தம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள்  மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன .

ஒரு குழந்தைகள் அருந்தும் பால் போச்சி( போத்தல்) மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள்  கண்டுபிடிக்கப்பட்டன.

நேற்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில்  65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

IMG 20250722 WA0064
IMG 20250722 WA0056
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )