
மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு ; முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு
மீகொட பகுதியில் இன்று (12) நடந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

