
ரணில் கைது தொடர்பில்பல அரசியல் எதிர்க்கட்சிகள் இணைந்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விடயம் தொடர்பில் கொழும்பில் பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துலொள்ளும் விசேட செய்தியாளர் சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
”அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம் ” எனும் தொனிப்பொருளில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக இந்த சந்திப்பில் வலியுறுத்தப்படுகின்றது .
CATEGORIES Sri Lanka

