
ஓகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 166,000 ஐ கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதம் இதுவரை 166,766 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் 38,456 சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
பிரித்தானியா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

