
இன்று முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.
குறித்த முடிவுக்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சீட் பெல்ட் இல்லாத சில வாகனங்களுக்கு சீட் பெல்ட் பொருத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

