செப்டம்பர் 25 முதல் ஆரம்பமாகும் சிறுவர்கள் தின தேசிய வாரம் !

செப்டம்பர் 25 முதல் ஆரம்பமாகும் சிறுவர்கள் தின தேசிய வாரம் !

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு அரசாங்கம் செப்டம்பர் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை “சிறுவர்கள் தின தேசிய வாரம்” என அறிவித்துள்ளது.

“அன்புடன் நம்மைப் பாதுகாத்துக் கொள்க – உலகை வெல்ல” என்ற தொனிப்பொருளின் கீழ் “சிறுவர்கள் தின தேசிய வாரம்” பல தேசிய திட்டங்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் உரிமைகளுக்கான ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )