
சம்பத் மனம்பெரிக்கு மீண்டும் விளக்கமறியல் தொடரும் தீவிர விசாரணைகள்
பாரிய ஐஸ் பொலிஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் தடுப்புக் காவலில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த சம்பத் மனம்பெரி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
இதன்போது மனம்பெரியை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக, மனம்பெரியை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மித்தெனிய, தலாவ பகுதியில் சம்பத் மனம்பெரியின் நண்பர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மனம்பெரியை ஒக்டோபர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் வலஸ்முல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் சம்பத் மனம்பெரியால் புடைக்கப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் தொடர்பில், சம்பத் மனம்பேரி மற்றும் பாக்கோ சமன் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின்படி, வீட்டின் பின்னால் புதைக்கப்பட்ட 02 தங்க நிற மெகசின்கள், 9 மிமீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் T-56 துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 115 ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை சம்பத் மனம்பெரிக்கு 02 மாதங்களுக்கு முன்பு பாக்கோ சமன் கொடுத்ததாக தற்போது கண்டுபிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், விசாரணையின் போது, சம்பத் மனம்பெரி இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை நண்பர் ஒருவரின் வீட்டின் பின்னால் புதைத்தது வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்ய முற்பட்டபோது , சம்பத் மனம்பெரி தலைமறைவாகினார். பின்னர் கடந்த 17 ஆம் திகதி பகல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர், வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு, அவரை விசாரணைக்காக 7 நாட்கள் போலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்க உத்தரவிட்டார்

