நேற்று சோதனை செய்யப்பட்ட 28,669 பேரில் பலர் கைது

நேற்று சோதனை செய்யப்பட்ட 28,669 பேரில் பலர் கைது

நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் ,குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக 1,006 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய விசேட சோதனை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,669

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,006

குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 31

பிடியாணையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 378

திறந்த பிடியாணையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 223

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63

அஜாக்கிரதையாக வாகனம் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20

பிற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4364

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )