
குஜராத்- பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற் றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்றிரவு நடக்கும் 4-வது லீக்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது.
CATEGORIES Sports News

