
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சி.ஐ.டி.யில் ஆஜரானார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (08) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இந்திய உளவுத்துறையிலிருந்து தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கும் அழைப்புகள் தனக்கு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாக அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து குணவர்தனவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

