
மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஏரியில் மூழ்கி 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொன்னக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ,குழாய் உதவியுடன் மீன்பிடிக்கும் ஒரு மீனவர் எனவும் சம்பவ தினதினத்தன்று வீடு திரும்ப தாமதமானதால் அவரைத் தேடியயுள்ளனர் .
இதன்போது ஏரியின் நடுவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சடலம் நிக்கவெரட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

