
கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு
வலி தென் மேற்கு பிரதேச சபையால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்குணவு வழங்கப்பட்டது.
2025ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி மூலம் பொருளாதார ரீதியாக வசதி குறைந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான போசாக்குணவு வழங்கும் நிகழ்வானது நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது.
ஆனைக்கோட்டை,மானிப்பாய் உப அலுவலகங்களுக்குட்பட்ட பிரதேச பயனாளிகளுக்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தவிசாளர் சபையின் செயலாளர் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

