
மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்
கேகாலை மாவட்டம் மாவனெல்ல கோவில்கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலீப் நிஷாந்த தெரிவித்தார்.
மேலும் இரண்டு பேரை மீட்க இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், அப்பகுதியிலிருந்து வெளியேறி நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பிய நான்கு பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

