மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவரிடம் 5000ரூபாய் லஞ்சம் கேட்ட இரண்டு பொலிஸார் கைது

மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவரிடம் 5000ரூபாய் லஞ்சம் கேட்ட இரண்டு பொலிஸார் கைது

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் கைது செய்யப்பட்டனர்.

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் , தியபெதும பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

முறைப்பாட்டாளருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை அவர் சமீபத்தில் (டிசம்பர் 9) ஓட்டிச் சென்றபோது, குறித்த ஓட்டுநர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வருவாய் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதையும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும் இரு பொலிஸாரும் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல், முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிள் காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் காலாவதியான வருவாய் உரிமம் ஆகியவை சந்தேக நபர்களான பொலிஸ் அதிகாரிகளின் காவலில் எடுக்கப்பட்டு ,இரண்டு உரிமங்களையும் திருப்பித் தர 5,000 ரூபாய் லஞ்சம் கோரப்பட்டதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 11.30அளவில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )