ரயில் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை ரயில்வே திணைக்களம் பதுளை வரை விரிவுபடுத்த திட்டம்                                   -அமைச்சர் பிமல்

ரயில் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை ரயில்வே திணைக்களம் பதுளை வரை விரிவுபடுத்த திட்டம் -அமைச்சர் பிமல்

இலங்கை ரயில்வே டிசம்பர் 25, 2025 முதல் கொழும்பிற்கு அப்பால் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை விரிவுபடுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் மட்டுமே பயணி ஏற்கனவே கட்டணம் செலுத்திய பயணி ரயிலில் பயணிக்கவிட்டால் பணத்தைத் திரும்பப் பெறும் வசதி இருந்தது என்று அவர் கூறினார்.

இந்நிலையில் ,டிசம்பர் 25 முதல் பதுளை, எல்லா, பண்டாரவளை , ஹப்புத்தளை, நானுஓயா மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் பணத்தைத் திரும்பப் பெறும் வசதி கிடைக்கும் என்று அமைச்சர் X இல் பதிவில் தெரிவித்தார்.

இந்த வசதி ஒரு முன்னோடித் திட்டம் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ராய்வே நிலையங்களிலும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கண்டி ரயில் நிலையமும் இந்தப் பட்டியலில் சேரும் என்று அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )