பல பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுக்கைகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலும், நதிக்கரைகளிலும் வசிக்கும் மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )