
உணவகங்களில் லஞ்ச் சீட் பாவனைக்கு எதிராக கடுமையாகும் சட்டம்யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபை கூட்டத்தில் தீர்மானம்
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட
உணவகங்களில் லஞ்ச் சீட் பயன்படுத்த முற்றாக தடை விதிக்கப்படுமென வல்வெட்டித்துறை நகராட்சி பொது மண்டபத்தில் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீறி பயன்படுத்தினால், குறித்த உணவக வியாபார உரிமம் இடை நிறுத்தப்படும் எனவும் நகரசபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி வரை மாற்று ஏற்பாடுகளுக்காக கால அவசகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16 முதல் லன்ச் சீட் பயன்படுத்த தடைவிதித்த நடைமுறை அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
CATEGORIES Sri Lanka

