
சர்வதேச ஒலிம்பிக் குழு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் வருடாந்த பொதுக்கூட்டத்தை (AGM) நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு (NOC) அறிவுறுத்தியுள்ளது.
அதே காலப்பகுதிக்குள் நடைபெற்று வரும் தடயவியல் கணக்காய்வு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும், அதன் அறிக்கையின் அடிப்படையில் தேவையான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகவும் IOC தெரிவித்துள்ளது.

