
பிளாஸ்டிக் குழாயில் மறைக்கப்பட்ட துப்பாக்கி ; 24 வயது சந்தேக நபர் கைது
உஸ்வெட்டகெய்யா – பமுனுகம பிரதேசத்தில், பிளாஸ்டிக் குழாய் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எம்.ஜி. சாணக்கவின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸ் பரிசோதகர் அறாகமவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 24 வயதுடைய சந்தேக நபர் வீடு ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு குறித்த துப்பாக்கி எங்கு மற்றும் எவ்வாறு கிடைத்தது, இதன் பயன்படுத்தல் குற்றச் செயல்களுக்காகவோ அல்லது பிறருக்காக வழங்கப்பட்டதோ என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

