
வறட்சியான காலநிலை காரணமாக நீரிலிருந்து வெளிவந்த புத்தர் சிலை
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொத்மலே காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து கடதோரா விகாரையின் புத்தர் சிலை நீரிலிருந்து வெளிப்பட்டுள்ளது.
தற்போது மலைநாட்டுப் பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதுடன், தங்களது நாளாந்த தேவைகளுக்கான நீரை பெற்றுக்கொள்வதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

