
மூன்று மாதங்களில் வாகன எண் தகடுகள் அச்சிடும் பணியை தொடங்க திட்டம் ; மோட்டார் போக்குவரத்து துறை
மோட்டார் போக்குவரத்துத் துறை அடுத்த மூன்று மாதங்களுக்குள் வாகன எண் தகடுகளை அச்சிடும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டெண்டர்களை அழைத்த பிறகு, வாகன எண் தகடுகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் தொடர்பான முதற்கட்ட பணிகளை தயாரித்து வருவதாகவும் துறை தெரிவித்துள்ளது.
இந்த பணிகள் வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையின் தலைமை அலுவலகத்தின் கீழ் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 4 லட்சம் வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்கப்பட உள்ளன.
வாகன எண் தகடுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பித்த பிறகு, சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு விரைவில் வாகன எண் தகடுகள் வழங்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

